Wednesday 21 August 2013

Sri Lanka Cricket Association - Cricket Tournament

இலங்கைத் துடுப்பாட்டச்சங்கம் நடாத்தும் துடு்ப்பாட்டப் போட்டிகளில் எமது கல்லூரியின் 17 வயது அணி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியினை வெற்றி கொண்டு மூன்றாம் சுற்றில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளது. ஹாட்லிக்கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் மூன்று இலக்குகளால் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிக் கல்லூரி அணி 125 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பாக பா.பிரதீஸ், சி.குகசாந்தன், இ.சிவராம் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினர். ஹாட்லிக் கல்லூரியின் க.அனந்தசயனன் அதிகளவாக 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்குக் களமிறங்கிய விக்ரோறியாக் கல்லூரி அணி ஏழு இலக்குகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சி.சிவசங்கர் 33 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஹாட்லிக் கல்லூரி சார்பில் க.அனந்தசயனன் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இதன் மூலம் விக்ரோறியாக் கல்லூரி அணி மூன்று இலக்குகளால் ஹாட்லிக் கல்லூரியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளது.