Friday 2 August 2013

A./L Students - Parents' Meeting‏

க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கற்கும் மாணவர்களின் இரண்டாந் தவணைப் பரீட்சை நிலமைகள் குறித்து பெற்றோருடன் ஆராய்வதற்கான கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. உயர்தர வகுப்புக்களில் கற்கும் சகல மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரியதாகும். அதிபரும் ஆசிரியர்களும் பெற்றோர்களுடன் கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் மாணவர்களின் அடைவுமட்ட விருத்தி பற்றி கலந்துரையாடினார்கள்.
முதல் நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை வழங்கலும் உயர் புள்ளி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கலும் இதன்போது இடம்பெற்றன.
See Photos