Sunday 11 August 2013

Dr.Sakunthalai - Visit to our school

இன்று எமது கல்லூரிக்கு பழைய மாணவியான Dr.சகுந்தலை தனது குடும்பத்தினருடன் வருகைதந்தார். கல்லூரியில் கற்கும் காலத்தில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த இவர் ஒரு வைத்திய கலாநிதி ஆவார். அதிபர், உதவி அதிபர் ஆகியோரை சந்தித்து கல்லூரி வளர்ச்சி குறித்து கலந்துரையாடிய Dr.சகுந்தலை தான் கல்வி கற்ற கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் கற்பித்த ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்தார். தன்னை இன்றைய உயர்நிலைக்குக் கொண்டுவந்த விக்ரோறியா அன்னை குறித்து உற்சாகத்துடன் கருத்துக்களை பரிமாறிய அவர் ஆங்கிலம், கணனிக்கல்வி என்பவற்றில் மாணவர்கள் கூடுதலான கவனம் செலுத்த ஆவன செய்யுமாறும் அதற்குத் தாங்கள் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் கூறினார். Dr.சகுந்தலை அவர்கள் சுழிபுரம் பறாளாய் வீதி அமரர் சுப்பையா உடையார் அவர்களின் பேர்த்தியும் அமரர் சிவஞானம் அவர்களின் புத்திரியுமாவார்.